மார்ச்சில் வலுசக்தி தட்டுப்பாடு ஏற்படும் - ரணில் எச்சரிக்கை

banner

அன்னிய செலாவணி குறைவடைந்தால் நாட்டில் மின்துண்டிப்பு ஏற்படலாம். எனவே நாட்டின் தற்போதைய வெளிநாட்டு செலாவணியின் கையிருப்பு தொடர்பில் அரசாங்கம் சபைக்கு தெரிவிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்தார்





வெளிநாட்டு செலாவணியின் அளவு வெகுவாக குறைவடையுமானால் நாட்டில் மின் துண்டிப்பு ஏற்படக்கூடிய நிலை உருவாகும் என்றும் தெரிவித்த அவர், மார்ச் மாதமளவில் உணவுத் தட்டுப்பாடு மற்றும் வலுசக்தி தட்டுப்பாடும் ஏற்படலாம் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.





பாராளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றிய அவர், அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்: கடந்த வெள்ளிக்கிழமை வரையான நாட்டின் அன்னிய செலாவணிகளின் தற்போதைய நிலை மற்றும் நாட்டின் நிதி டொலர் ஊடாகவும் கையில் இருக்கும் தங்கங்களையும் டொலர் மூலமாக சபைக்கு தெரிவிக்க வேண்டும்.





அது தொடர்பான அறிக்கையை மத்திய வங்கி சர்வதேச நாணய நிதியத்துக்கு அனுப்பியிருக்க வேண்டும். எம்மிடமிருக்கும் வெளிநாட்டு செலாவணியின் அளவை அடிப்படையாகக் கொண்டே வலுசக்தி தீர்மானிக்கப்படுகின்றது.





அன்னிய செலாவணி குறைவடைந்தால் நாட்டில் மின்துண்டிப்பு ஏற்படலாம். அவ்வாறான நிலைமை ஏற்படுமானால் அதற்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது தொடர்பில் நாம் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கிணங்க வெளிநாட்டு செலாவணி தொடர்பான அறிக்கையை சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும். எமக்கு கிடைத்துள்ள தகவலின் படி எம்மிடமிருக்கும் வெளிநாட்டு செலாவணியின் அளவு 1.5 டொலர் பில்லியனாகும். அதில் 300 தங்கம். அப்படியானால் எமது கையிருப்பு 1.2பில்லியனாகும்.





இந்த தகவல்களை கடந்த வெளிக்கிழமை மத்திய வங்கியானது சர்வதேச நாணய நிதியத்துக்கு அனுப்பியுள்ளது. அவ்வாறு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையையே நாம் சபையில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.