கொரோனாவை ஒழிக்க இதுவரை இவ்வளவு செலவா?
Politics 2 ஆண்டுகள் முன்
கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக அரசு, இதுவரை 113 பில்லியன் ரூபா நிதியை செலவிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அவசியமான காலங்களில் அவசியமான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் அரசு ஒருபோதும் பின்னிற்கவில்லையென தெரிவித்த அமைச்சர், உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளோடு ஒப்பிடுகையில் வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளில் இலங்கை முன்னணியில் திகழ்வதற்கான காரணமும் அதுவே என்றும் தெரிவித்தார்.
அத்துடன் சுகாதாரத் துறையில் நிலவும் வெற்றிடங்கள் மற்றும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து அந்த துறையை மேலும் முன்னேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படுமென்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
Related Posts