பிரதமர் மோடியுடன் பஸில் இன்று பேச்சு
Politics 2 ஆண்டுகள் முன்
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று பேச்சு நடத்தவுள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் கலாச்சார ரீதியிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது சம்பந்தமாகவும், இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்படவுள்ளன.
அத்துடன், மலையக மக்களுக்கான வீட்டுத்திட்டம் பற்றியும் கலந்துரையாடப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, இந்திய நிதி அமைச்சருடன், இலங்கை நிதி அமைச்சர் நேற்று பேச்சுகளை நடத்தினார்.
Related Posts