தற்புகழுக்காக கோடிகளை செலவிட்ட சஜித் - சபையில் வெளியான தகவல்

banner

" முடிந்தால் 06 ஆம் திகதி சபைக்கு வாருங்கள். எல்லாவற்றையும் அம்பலப்படுத்தி, உங்கள் முகத்திரையை கிழிப்பேன்."





இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு சவால் விடுத்துள்ளார் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த.





நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் கூறியவை வருமாறு,





" தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரே வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக இருந்தார். போஸ்டர்களை ஒட்டவும், பிரச்சாரம் செய்யவும் அவர் பெரும் தொகை நிதியை செலவிட்டுள்ளார்.





எதிர்க்கட்சித் தலைவர் எனக் கூறிக்கொள்ளும் அந்த நபர் 3 ஆயிரம் மில்லியன் ரூபாவை காரணமின்றி செலவுசெய்துள்ளார். தற்புகழுக்காக எவரும் இவ்வளவு நிதியை செலவிடமாட்டார்கள். எனவே, இது பற்றி விசாரிப்பதற்கும் தெரிவுக்குழு அவசியம்.





வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு தொடர்பில் 6 ஆம் திகதி சபையில் விவாதம் நடக்கவுள்ளது. அன்றைய தினம் சபையில் இருக்குமாறு எதிர்க்கட்சித் தலைவருக்கு சவால் விடுக்கின்றேன். அப்போது இவற்றை அம்பலப்படுத்துவேன். ஆடையின்றி வெளியேற வேண்டிய நிலையே எதிர்க்கட்சித் தலைவருக்கு ஏற்படும்."