'மோதல் வேண்டாம் - ஓரணியில் பயணிப்போம்'

Politics 2 ஆண்டுகள் முன்

banner

அரச கூட்டணியில் உள்ள பங்காளி கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகளுக்கு தீர்வு கண்டு ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணி என்ற ரீதியில் அரசியலில் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும்.





முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் கருத்துரைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆளும் கட்சி குழு கூட்டத்தின்போது வலியுறுத்தியுள்ளார்.





பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் ஆளும் கட்சி குழு கூட்டம் இடம்பெற்றது. அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.





இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதமர், கூட்டணியில் பங்காளி கட்சிகளுக்கிடையில் தோற்றம் பெற்றுள்ள முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும்.





கூட்டணியின் அனைத்து தரப்பினரையும் அரசியல் ரீதியில் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும். அரசாங்கத்தையும் கூட்டணிமையும் பலவீனப்படுத்தும் வகையில் ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் கருத்துரைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆளும் கட்சி உறுப்பினர்களிடம் வலியுறுத்தினார்.