அமெரிக்காவில் அசுர புயல் - பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

Politics 2 ஆண்டுகள் முன்

banner

ந. பரமேஸ்வரன்





வெள்ளிக்கிழமை சூறாவளி தாக்கிய அமெரிக்காவின் ஆறு மாநிலங்களிலும் குறைந்தது 83 பேர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நூறு வரை இருக்கலாமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்; இவர்களில் 70 பேர் மெழுகுதிரி தொழிற்சாலையில் கடமையாற்றியவர்கள்.





மேபீல்ட் பகுதியில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஜேம்ஸ் கோமர் இவ்வளவு மோசமாக சூறாவளி தாக்கியது இதுவே முதல் முறை என கூறியுள்ளார். மாநிலத்திலுள்ள மெழுகுவர்த்தி தொழிற்சாலையில் இருந்து 60 பேர் மீட்கப்பட்டுள்ள அதே வேளை  60 பேர் காணாமல் போயுள்ளனர்.





மெழுகுவர்த்தி தொழிற்சாலை இடிபாடுகளுக்குள் சிக்கிய முனகியவாறு  முகநூல் ஊடாக அபயக்குரல் எழுப்பிய ஊழியர் ஒருவரை மீட்புக்குழுவினர் மீட்டெடுத்துள்ளனர். ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகவே தங்கள் கருதியதாக உயிர் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர். 365 கிலோமீட்டர் நீளத்திற்கு சூறாவளி தாக்கியுள்ளது. எனது பாட்டன் பாட்டியின் வீடு இருந்த இடம் தெரியாமல் காணப்படுகிறது; அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லையென ஒருவர் கூறியுள்ளார்.





காணாமல் போனவர்கள் எத்தனை பேர் என்பது இன்னமும் தெரிய வரவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





அமேசன் களஞ்சியசாலை ஊழியர்கள் ஆறு பேர் இறந்துள்ளனர்; தனது இதயமே நொருங்கி விட்டதாக .அமேசன் நிறுவுனர் தெரிவித்துள்ளார் அவசரகாலநிலை பிரகடனத்தில் ஒப்பமிட்ட பைடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக குடியிருப்புகள் உட்பட தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கு தேவையான நிதியையும் விடுத்துள்ளார்.