இம்ரான் கானுக்கு பதிலடி கொடுத்த ஆப்கானின் முன்னாள் ஜனாதிபதி
Politics 2 ஆண்டுகள் முன்
ந. பரமேஸ்வரன்
ஆப்கானிஸ்தானியர்களுக்கு எதிராக பேசும் பிரச்சாரத்தை நிறுத்துமாறும் ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாய், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்லாமிய நாடுகளின் கூட்டிணைப்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் விதமாகவே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) வெளியுறவு அமைச்சர்கள் கவுன்சிலின் 17வது அமர்வில் கான் தனது உரையில் ,
" உலகம் சரியான நேரத்தில் செயல்படத் தவறினால் ஆப்கானிஸ்தான் மிகப்பெரிய மனிதனால் உருவாக்கப்பட்ட நெருக்கடியாக மாறும்" என்று எச்சரிதிருந்தார்.
கல்வி, சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறைகளின் சரிவை காணும் எனவும் எடுத்துரைத்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதத்திலேயே ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பிரச்சாரத்தை பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் அச்சுறுத்தல் ஒரு தெளிவான பிரச்சார உண்மை, இந்த பிரச்சினை முற்றிலும் எதிர்மாறானது மற்றும் ISIS அச்சுறுத்தல் பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு இயக்கப்பட்டது என ஹமீத் கர்சாய் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Related Posts