'உள்ளக பொறிமுறைமூலம் தீர்வை காணலாம்' - நீதி அமைச்சர் அலிசப்ரி
Politics 2 ஆண்டுகள் முன்
தேசிய பொறிமுறை மூலம் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும் காணாமற்போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் நீதியமைச்சர் அலி சப்ரி கிளிநொச்சியில் தெரிவித்துள்ளார்.
அந்தப் பிரச்சினை தொடர்பில் ஒன்றிணைந்த கவனத்தை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள அமைச்சர், யுத்த காலத்தின் போது காணாமல் போனவர்கள் எத்தகைய மனநிலையுடன் செயற்பட்டிருந்தாலும் அவர்களின் குடும்பத்திற்கு நட்ட ஈடு வழங்கி அவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
அனைவரும் இலங்கையர் என்ற வகையில் சகோதரத்துவத்துடன் செயற்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள அமைச்சர் இனவாதம் எந்த தரப்பு அல்லது எந்த ரீதியில் வந்தாலும் அதனை நிராகரித்து நல்லிணக்கத்தையும் தேசிய ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டலில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related Posts