ஈழத் தமிழர்களை கொன்று குவித்துவிட்டு தமிழன் என்பதா? ராகுலுக்கு சாட்டையடி

banner

" திமுக உடன் சேர்ந்து ஒன்றரை லட்சம் தமிழினத்தையே கொலை செய்து விட்டு இன்றைக்கு தமிழன் என்று சொல்கிறார் ராகுல் காந்தி. அவர் தமிழன் என்று சொல்வதற்கு என்ன முகாந்திரம் உள்ளது." என கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், வரலாறு அவரை மன்னிக்காது என்று ஆவேசமாக தெரிவித்தார்.





லோக்சபாவில் நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி உரையாற்றினார். தமிழகம் பற்றி அதிகம் கதைத்திருந்தார்.





அதன்பின்னர் நாடாளுமன்ற வளாகத்தைவிட்டு வெளியேவரும் போது, தமிழகத்தை அதிகமுறை உச்சரித்தது ஏன் என அவரிடம் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு நானும் ஒரு தமிழன்தான் என்று பதில் அளித்தார்.





ராகுல்காந்தியின் பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி உள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் இது குறித்து செய்தியார்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழன் என்று சொல்வதற்கே அவருக்கு முகாந்திரம் இல்லை என்று தெரிவித்தார்.





" ஒட்டு மொத்தமாக திமுக உடன் சேர்ந்து ஒரு தமிழினத்தையே குளோஸ் செய்தவர்கள். வரலாறே அவர்களை மன்னிக்காது. ஒன்றரை லட்சம் தமிழர்களின் ஆன்மா அவர்களை மன்னிக்கவே மன்னிக்காது. தமிழினத்தையே கொன்று குவித்து விட்டு இப்போது தமிழன் தமிழன் என்று பேசினார் தமிழர்கள் நம்ப மாட்டார்கள்." என்றும் ஜெயக்குமார் ஆவேசமாக தெரிவித்தார்.