'ஊடகவியலாளர்களை தடுத்து வைத்துள்ள தலிபான்கள்'

banner

ஆப்கானிஸ்தானில் இரு வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் தலிபான்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.ஒருவர் பி.பி.சி. நிருபர் Andrew North மற்றவர் ஐ.நாவுக்கான அகதிகள் அலுவலகத்தின் ஊடகவியலாளர். ஐ.நாவுக்கான அகதிகள் அலுவலகம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.





பி.பி.சி. நிருபர் Andrew North கடந்த 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வருகிறார்.





நங்கள் இவர்களது பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம் என அகதிகளுக்கான ஐ,நா அலுவலகம் தெரிவித்துள்ளது. இவர்களின் விடுதலைக்கு யாரவது உதவ முடியுமா என ஆராய்ந்து வருவதாகவும் அகதிகளுக்கான ஐ,நா அலுவலகம் தெரிவித்துள்ளது.





தலிபான்களின் பேச்சாளர் Zabihullah Mujahid இந்த விடயம் குறித்து தாங்கள் ஆராய்ந்து வருவதாகவும் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடயத்தின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த ஊடகவியலாளர்களை தடுத்து வைப்பதற்கான தேவை எதுவும் இல்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார். .