'தீவிரவாதிகளுக்கும் எனக்கும் தொடர்பு உள்ளது' - பிரியங்கா காந்தி (காணொலி)

Politics 2 ஆண்டுகள் முன்

banner

" தீவிரவாதிகளுக்கும் எனக்கும் தொடர்பு உண்டு." - என்று இந்திய காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.





" தீவிர வாதிகளுக்கும் உங்களுக்கும் தொடர்பு இருப்பதாக பா.ஜ.க. அமைச்சரான ஸ்மிருதி இராணி குற்றம் சாட்டி உள்ளாரே?" - என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியால், கொதிப்படைந்த பிரியங்கா காந்தி, மிகவும் சிறப்பான முறையில் பதிலடி கொடுத்துள்ளார். இதனை காங்கிரஸ் சார்ந்த வலைத்தளங்கள் தற்போது வைரலாக்கியுள்ளன.





மேற்படி கேள்விக்கு பிரியங்கா வழங்கிய பதில் வருமாறு,





" ஆம். எனக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உண்டு. என் தந்தையை தீவிரவாதிகள் தான் கொன்றார்கள்.
என் பாட்டியை தீவிரவாதிகள் தான் கொன்றார்கள். என் குடும்பமே இந்த நாட்டிற்கு தியாகம் செய்து உள்ளது.
தேவையற்ற பேச்சுகளை நிறுத்துங்கள்." - என்றார்.






https://www.facebook.com/watch/?v=1336803080168761&extid=NS-UNK-UNK-UNK-IOS_GK0T-GK1C&ref=sharing