'காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்மீது தாக்குதல் - அநீதிக்கு எதிராக அணிதிரளுமாறு அழைப்பு

Politics 2 ஆண்டுகள் முன்

banner

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் தாய்மாருக்கு எதிராக,மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தாக்குதலை மேற்கொண்டோருக்கு எதிராக குரல்கொடுக்க அணிதிரளுமாறும் வடக்கு, கிழக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





அரசியல் தலைவரின் வருகையை எதிர்த்து கண்டன பேரணியை நடாத்துவதற்காக சென்றிருந்தபோது, தாய்மார் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடாத்தப்பட்டது. துன்புறுத்தல்கள், அநியாயங்களும்





ஏற்படுத்தப்பட்டன.உண்மைக்கும் நீதிக்குமாக போராடும் தாய்மாருக்கு நடந்த அநீதியைக் கண்டித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (03) யாழ்ப்பாணத்தில் கண்டன பேரணி நடாத்தப்படவுள்ளது.காலை பத்து மணிக்கு பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகும் இப்பேரணி முற்றவெளி மைதானம் வரை செல்லும்.





எனவே, ஒவ்வொரு மாவட்டங்களிலும் இருக்கும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், உள்ளுர் அமைப்புக்கள் வர்த்தக சங்கங்கள் உட்பட அனைத்து பொது அமைப்புக்கள், விளையாட்டுக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், மதகுருமார் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் இதில் கலந்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.