அரச விசுவாசிகளை அடித்து விரட்டிய மக்கள்
Politics 2 ஆண்டுகள் முன்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து, சிலாபம் நகரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, மக்கள் விரட்டியடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும், அவரின் சகாக்களுமே அரசுக்கு ஆதரவான போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என நாட்டு மக்கள் வலியுறுத்திவரும் நிலையில், அதற்கு மாறாக போராட்டம் இடம்பெற்றதால் கொதிப்படைந்த மக்கள், போராட்டக்காரர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சிலாபம் நகரில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.
Related Posts