ஆங்கிலக் கால்வாய் அகதிகளுக்கு றுவாண்டா நாட்டில் விசேட முகாம்!
Politics 1 வருடம் முன்
தஞ்சம் கோருவோர் தொடர்பான புதிய திட்டத்தை பிரிட்டிஷ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் வெளியிட்டிருக்கிறார். அதன்படி படகுகளில் வந்து நாட்டுக்குள் புகுந்து புகலிடம் கோருவோரைத் திருப்பி அனுப்புவதற்கான நிலையம் ஒன்று ஆபிரிக்காவில் - றுவாண்டா நாட்டில்- திறக்கப்படவுள்ளது என்ற தகவலை அவர் வெளியிட்டிருக்கிறார்.
ஆட்களைக் கடத்துவோரிடம் இருந்து பல்லாயிரக் கணக்கான உயிர்களைப் பாதுகாப்பதற்கு இந்தத் திட்டம் மிக அவ
சியமானது என்று பிரதமர் கூறியிருக்கிறார்.
தனிஆட்களாகப் படகுகளிலும் வேறு வழிகளிலும் பிரிட்டனுக்கு வருகின்றவர் களைப் பராமரிக்கவும் அவர்களது கோரிக்கைகளைப் பரிசீலிக்கவும் றுவாண்டா அரசு இணங்கியுள்ளது. அதற்கான 120 மில்லியன் பவுண்ட்ஸ் செலவிலான திட்ட உடன்படிக்கை ஒன்றை அந்நாட்டு அரசுடன் செய்து கொள்ளும் ஏற்பாடுகளில்பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் பிரித்தி பட்டேல் (Priti Patel) ஈடுபட்டுள்ளார் என்று அறிவிக்கப்படுகிறது.
திட்டம் முதற் கட்டமாக ஐந்து ஆண்டுகள் நடைமுறைப்படுத்தப்படும். முதலில் ஆங்கிலக் கால்வாய் தாண்டிவரும் குடியேறி
களில் ஆண்கள் மட்டுமே றுவாண்டாமுகாமுக்கு அனுப்பிவைக்கப்படுவர்.
அரசியல் அகதிகள் தவிர்ந்த பொருளாதார நோக்கங்களுடன் வருகின்றவர்களேஒரு வழி விமான ரிக்கெற் வழங்கப்பட்டு
-சுமார் ஆறாயிரம் கிலோ மீற்றர்கள் தொலைவில்-கிழக்கு ஆபிரிக்காவில்உள்ள முகாமுக்குச் செல்ல நேரிடும்.
ஆபிரிக்கா தவிர்ந்த ஏனைய நாடுகளில் இருந்து வருகின்ற அகதிகள் எவ்வாறு கையாளப்படுவர் என்பது பற்றித் தெளிவாக எதுவும் தெரியவரவில்லை.
பிரிட்டனில் தஞ்சம் கோருவோரைத்வேறொரு நாட்டில் தங்க வைக்கவும் அவர்களது விண்ணப்பங்களைப் பரிசீலித்து முடிவுகளை எடுக்கவும் றுவாண்டா அரசுக்கு அனுமதி வழங்குவதில் பலவித சட்டச் சிக்கல்கள் எழக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்ட ரீதியிலும் மனித உரிமைகள் விடயத்திலும் இந்த பிரிட்டிஷ் - றுவாண்டா உடன்படிக்கை சவாலுக்கு உட்படலாம் என்று மனித உரிமைகள் இயக்கங்கள் தெரிவிக்கின்றன. பெரும் அவலங்களைத் தாண்டி ஆங்கிலக் கால்வாய் ஊடே வருகின்றவர் களை வெகு தொலைவுக்குத் திருப்பி அனுப்பும் ஜோன்சன் அரசின் திட்டத்தை எதிர்க் கட்சியும் மனித உரிமை அமைப்பு களும் கண்டித்துள்ளன.
டென்மார்க் நாடும் இதேபோன்று அங்கு புகலிடம் கோரி வருவோரை றுவாண்டாநாட்டில் வைத்துப் பராமரித்துத் தஞ்சக் கோரிக்கைகளை அங்கு வைத்தே முடிவு செய்யத் திட்டமிட்டிருப்பது தெரிந்ததே.
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்-
Related Posts