நாமலிடம் 4 மணிநேரம் விசாரணை!

banner

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று வாக்குமூலம் ஒன்றை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.





அவரிடம் சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





கடந்த 9 ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.