மே - 09 சம்பவம் - தண்டனை கோருகிறார் நாமல்

banner

நாடு முழுவதும் கடந்த 09 ஆம் திகதியன்று இடம்பெற்ற வன்முறையில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரியுள்ளார்.





நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர், இந்த கோரிக்கையை விடுத்தார்.





இதன்போது, ஆட்சேபனையை வெளியிட்ட, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர், நாமல் ராஜபக்ச கூறுவதில் நியாயம் இருப்பதாக குறிப்பிட்டார்.





இதன்படி, 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைக்கு காரணமான நாமல் ராஜபக்ச, பொலிஸில் சரணடைய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.





எனினும் இதனை மறுத்த நாமல் ராஜபக்ச, இச் சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், வாக்கு மூலங்களை வழங்கியுள்ளனர் என்று குறிப்பிட்டார்.