O/L பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி வெடி விபத்தில் காலை இழந்தார்!
Politics 1 வருடம் முன்
கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கிளாலி பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவியொருவர் காயமுற்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குறித்த வெடிப்புச் சம்பவம் மற்றும் மாணவிக்கு ஏற்பட்டுள்ள காயங்களை பார்க்கும்போது இது கண்ணிவெடியை போல் பாரதூரமான வெடி அல்லவென்றும் அதைவிட குறைந்த சக்தியுள்ள வெடிச் சம்பவம் என்றும் பளை பொலிஸார் தெரிவித்தனர் .
மாணவியும், அவரது தாயும் வீட்டுத்தோட்டத்தை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளனர்.
மாணவி தோட்டத்திலுள்ள பனை மரத்தடிக்கு அருகில் சுத்தம் செய்த போது பூமிக்கு அடியில் இருந்து ஏதோ ஒரு பொருள் வெடித்துச் சிதறியுள்ளது.இச் சம்பவத்தில் மாணவி காயமுற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாணவியை உடனடியாக பளை வைத்தியசாலையில் சேர்த்ததாகவும் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வெடி விபத்தில் மாணவியின் ஒரு கால் கணுக்காலுக்குக் கீழ் கடுமையான காயங்களுக்கு உள்ளானமையால் மாணவி கணுக்காலுக்கு கீழ் காலை இழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பரந்தளவில் விசாரணை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Related Posts