'பெற்றோல் இல்லை' - எரிபொருள் நிலைய உரிமையாளர் வீடு தீ வைப்பு

Politics 1 வருடம் முன்

banner

கெக்கிராவை, இப்போலோகம, ரணஜயபுற பிரதேசத்திலுள்ள பெற்றோல் நிலைய உரிமையாளரின் வீடு , கடந்த 21 ஆம் திகதி இரவு கொளுத்தப்பட்டுள்ளது.





21 ஆம் திகதி எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக பெருந்தொகையானோர் இந்த பெற்றோல் நிலையத்தில் வரிசையில் காத்திருந்தனர்.





எரிபொருள் முடிவடைந்ததால் வரிசையில் நின்ற சிலருக்கு எரிபொருள் வழங்க முடியாமல் போயுள்ளது. இதனால் ஆத்திரமுற்ற குழுவினர் , அந்த பெற்றோல் நிலைய உரிமையாளரின் வீட்டுக்கு தீ வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.





மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தபோது இந்த தீவைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.





தீவைப்பு காரணமாக க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றவிருந்த பெற்றோல் நிலைய உரிமையாளரின் மகளது புத்தகங்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளன.