ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் மோதல்!
Politics 1 வருடம் முன்
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கும், அரசுக்கு ஆதரவளித்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட நிமல் சிறிபாலடி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோருக்கிடையில் கடும் அரசியல் போர் மூண்டுள்ளது. சுதந்திரக்கட்சியில் சிரேஷ்ட உப தலைவர்களாக செயற்பட்ட நிமல் சிறிபாலடி சில்வா, மஹிந்த அமரவீர ஆகியோர் கட்சியில் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர் என்ற அறிவிப்பை கட்சி அண்மையில் விடுத்திருந்தது. இதற்கு மைத்திரிபால சிறிசேன உடன்படவில்லை, தயாசிறி ஜயசேகரவே இந்த முடிவை எடுத்து அறிக்கையை விடுத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் நிமல் மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரை மைத்திரிபால சிறிசேன சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.“ உங்கள் இருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது.” எனக்கூறி, சமரசப்படுத்த முயற்சித்துள்ளார். “ தங்களுக்கு வாய்மூல உத்தரவாதம் வேண்டாம், அறிக்கைமூலம் வழங்கவும்.” என இதன்போது நிமல் சிறிபாலடி சில்வா எடுத்துரைத்துள்ளார். இது குறித்து கட்சி செயலாளருடன் மைத்திரி கலந்துரையாடியுள்ளார். மத்திய குழுவின் அனுமதி இன்றி, அவ்வாறு செய்ய முடியாது என தயாசிறி குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்தே நிமல் சிறிபாலடி சில்வா, நீதிமன்ற நடவடிக்கை நாடி, இடைக்கால தடை உத்தரவையும் பெற்றுள்ளார். எனினும், தயாசிறிக்கும், அவர்களுக்கும் இடையிலான அரசியல் சமர் தொடர்கின்றது.
Related Posts