ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

banner

2022 ஜூன் மாதத்தில் வர்த்தக பொருட்கள் ஏற்றுமதி மூலம் கிடைத்த வருமானம் 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.





இலங்கை சுங்க பிரிவு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி தகவல் தெரிய வந்துள்ளது.





தைத்த ஆடைகள், ரப்பர் மற்றும் தெங்கு உற்பத்தி பொருட்கள், குடிவகை, கடல் உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி காரணமாக வருமானம் அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவிக்கின்றது.





தைத்த ஆடைகள் மற்றும் புடவை வகைகள் ஏற்றுமதி மூலம் ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளதாகவும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உட்பட ஏனைய வர்த்தக சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் இவ்வாறு ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.