சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 47 பேர் கைது!

banner

சட்டவிரோதமாக நாட்டிலிருந்து செல்ல முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 47 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.





வென்னப்புவயில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்தது.





18 வயதிற்கு மேற்பட்ட 37 ஆண்களும், 06 பெண்களும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.





இவர்கள் பயணித்த மூன்று வேன்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.





வவுனியா, திருகோணமலை,கல்முனை,மட்டக்களப்பு, புத்தளம், சிலாபம், மாரவில, மஹவெவ, முந்தலம் மற்றும் வௌ்ளவத்தையை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.





கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளுக்காக வென்னப்புவ பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.