நாடாளுமன்றில் ஹர்ஷவுக்கு உயர் பதவி!

Politics 1 வருடம் முன்

banner

அரச கணக்குகள் தொடர்பான நாடாளுமன்ற நிதிக்குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்படவுள்ளார்.





ஆளும் மற்றும் எதிரணிகளின் இணக்கப்பாட்டுடன் குறித்த பதவிக்கு ஹர்ஷ டி சில்வா ஏகமனதாக தெரிவு செய்யப்படவுள்ளார்.





குறித்த பதவி கிடைக்கும் பட்சத்தில் அதனை ஏற்க தான் தயார் என்று ஹர்ஷ டி சில்வா இன்று தெரிவித்தார். குறித்த குழு ஊடாக நாட்டுக்கு சேவையாற்ற முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.





அத்துடன், நிதிக்குழுவுக்கு நிறைவேற்று அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.