கோட்டா இலங்கைவர தடையா?

Politics 1 வருடம் முன்

banner

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் நாடு திரும்புவார் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அநுருத்த தெரிவித்தார்.





" இலங்கையில் இருந்து மாலைதீவு சென்ற கோட்டாபய ராஜபக்ச, அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார், தற்போது தாய்லாந்து சென்றுள்ளார். எதற்காக இவ்வாறு சுற்றி திரிகின்றார், அவருக்கு இலங்கை வருவதற்கு உகந்த சூழ்நிலை இல்லையா" - என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.





" அவ்வாறு எந்த தடையும் இல்லை, அவர் விரும்பிய நேரத்தில் நாடு திரும்பலாம். அவருக்கென சில பணிகள் இருக்கலாம். அந்த பணிகள் முடிவடைந்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிச்சயம் நாடு திரும்புவார். இலங்கைதான் அவரின் நாடு." - என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அநுருத்த குறிப்பிட்டார்.