ஆட்சிக் கவிழ்ப்புக்கு குமார வெல்கம அறைகூவல்!

Politics 1 வருடம் முன்

banner
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசைக் கவிழ்க்க ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது.

அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, அனுர பிரியதர்சன யாப்பா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.