ராஜபக்ச குடும்பத்தால் இனி மீண்டெழ முடியாது!
Politics 1 வருடம் முன்
" ராஜபக்சக்களுக்கான மக்கள் செல்வாக்கு இல்லாமல்போய்விட்டது. சரிந்துள்ள அவர்களால் இனி நேர் வழியில் மீண்டெழவே முடியாது."
இவ்வாறு 'நவ லங்கா நிதாஷ் பக்சய'வின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" சந்திரிக்கா அம்மையாரின் ஆலோசனையின் பிரகாரமே நாம் செயற்படுகின்றோம். ஐக்கிய மக்கள் சக்தி, சம்பிக்க அணி, விமல் தரப்பு, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அதிருப்திக்குழு என எதிரணியில் செயற்படும் நாம் அனைவரும் நிச்சயம் பொது மேடைக்கு வருவோம். இடதுசாரிக் கட்சிகள் ஒன்றிணைந்தாலும் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஒத்துழைப்பு அவசியம்.
ரணில் விக்கிரமசிங்க நல்லவர். எனினும், மொட்டு கட்சி அவரின் காலை வாரிவிடும். எனவே, தேர்தலொன்றுக்கு செல்வதே ஏற்புடைய நடவடிக்கையாக அமையும்.
அதேவேளை, ராஜபக்சக்கள் சரிந்துவிட்டனர். அவர்களுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. எனவே, அவர்களால் மீண்டெழ முடியாது. " - என்றார்.
இவ்வாறு 'நவ லங்கா நிதாஷ் பக்சய'வின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" சந்திரிக்கா அம்மையாரின் ஆலோசனையின் பிரகாரமே நாம் செயற்படுகின்றோம். ஐக்கிய மக்கள் சக்தி, சம்பிக்க அணி, விமல் தரப்பு, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அதிருப்திக்குழு என எதிரணியில் செயற்படும் நாம் அனைவரும் நிச்சயம் பொது மேடைக்கு வருவோம். இடதுசாரிக் கட்சிகள் ஒன்றிணைந்தாலும் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஒத்துழைப்பு அவசியம்.
ரணில் விக்கிரமசிங்க நல்லவர். எனினும், மொட்டு கட்சி அவரின் காலை வாரிவிடும். எனவே, தேர்தலொன்றுக்கு செல்வதே ஏற்புடைய நடவடிக்கையாக அமையும்.
அதேவேளை, ராஜபக்சக்கள் சரிந்துவிட்டனர். அவர்களுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. எனவே, அவர்களால் மீண்டெழ முடியாது. " - என்றார்.
Related Posts