நாடாளுமன்றம் இன்று கூடுகிறது - 22 வும் வருகிறது!

banner
ஒக்டோபர் மாதத்துக்கான முதல்வார நாடாளுமன்றக் கூட்டத்தொடர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (03) ஆரம்பமாகின்றது.

இதன்படி முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை , இதுவரை பல்வேறு காரணங்களால் நாடாளுமன்றத்தில் கேட்கப்படாத வாய்மூல விடைக்கான 50 கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை தவிர 4ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை தினமும் முற்பகல் 9.30 மணி முதல் மு.ப 10.30 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 6 மற்றும் 7ஆம் திகதிகளில் அரசியலமைப்புக்கான 22வது திருத்தச்சட்டுமூலம் தொடர்பான விவாதம் நடத்தப்படவுள்ளது.