தீபாவளிக்கு ரூ. 15000 கோருகிறார் சஜித்!
Politics 1 வருடம் முன்
பணவீக்கத்துக்கு மத்தியில் தீபாவளியை கொண்டாட ரூ. 5000 போதுமா? பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 15,000 வழங்குமாறு சஜித் கோரிக்கை! அமைச்சரும் பச்சைக்கொடி!!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்கொடுப்பனவாக 15 ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு தேயிலை சபை ஊடாகவேனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடம் கோரிக்கை விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதன்போதே எதிர்க்கட்சித் தலைவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
" தீபாவளி பண்டிகையானது, இந்துக்களுக்கு மிக முக்கிய நிகழ்வாகும். பெருந்தோட்டத் தொழிலாளர்களுள் பெரும்பாலோனார் இந்துக்கள். எனவே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அவர்களுக்கு கடந்த காலங்களில், கடன் அடிப்படையில் 5 ரூபா முற்பணம் வழங்கப்பட்டுவந்தது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பணவீக்கம், பொருளாதார சூழ்நிலைக்கு மத்தியில் எந்த விதத்திலும் அந்த கொடுப்பனவு போதுமானதாக இல்லை, எனவே, 15 ஆயிரம் ரூபாவை கடன் அடிப்படையில் வழங்குவதற்கு, தேயிலை சபை தலையிட வேண்டும்." - என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் பத்திரண,
" இது சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
15 ரூபாவாக வழங்குவதற்கு, தேயிலை சபை ஊடாக தலையீடு செய்ய முடியும். கடன்தான் வழங்கபடுகின்றது.
" இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம். உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தேயிலை சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது." - என்றார்.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்கொடுப்பனவாக 15 ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு தேயிலை சபை ஊடாகவேனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடம் கோரிக்கை விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதன்போதே எதிர்க்கட்சித் தலைவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
" தீபாவளி பண்டிகையானது, இந்துக்களுக்கு மிக முக்கிய நிகழ்வாகும். பெருந்தோட்டத் தொழிலாளர்களுள் பெரும்பாலோனார் இந்துக்கள். எனவே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அவர்களுக்கு கடந்த காலங்களில், கடன் அடிப்படையில் 5 ரூபா முற்பணம் வழங்கப்பட்டுவந்தது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பணவீக்கம், பொருளாதார சூழ்நிலைக்கு மத்தியில் எந்த விதத்திலும் அந்த கொடுப்பனவு போதுமானதாக இல்லை, எனவே, 15 ஆயிரம் ரூபாவை கடன் அடிப்படையில் வழங்குவதற்கு, தேயிலை சபை தலையிட வேண்டும்." - என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் பத்திரண,
" இது சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
15 ரூபாவாக வழங்குவதற்கு, தேயிலை சபை ஊடாக தலையீடு செய்ய முடியும். கடன்தான் வழங்கபடுகின்றது.
" இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம். உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தேயிலை சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது." - என்றார்.
Related Posts