ஜெனிவாவில் இலங்கைக்கு கடும் நெருக்கடி!
Politics 1 வருடம் முன்
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கை குறித்த பிரேரணை வாக்கெடுப்பிற்கு விடப்பட்டால் தனக்குப் போதிய ஆதரவு கிடைக்காது என இலங்கை கருதுகின்றது.
வாக்களிக்கத் தகுதியுள்ளா 47 நாடுகளில் ஆக ஆறு நாடுகள் மாத்திரமே தனக்கு ஆதரவாக – பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் என கொழும்பு அச்சம் கொண்டுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய பிரேரணை நிறைவேற்றப்படுவதைத் தடுக்க முடியும் என தேவையற்ற நம்பிக்கையைத் தாம் கொண்டிருக்கவில்லை என வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை குறித்த இந்தப் பிரேரணை இலங்கையின் பொறுப்புக்கூறல், மனித உரிமை மீறல் தொடர்பில் ஆதாரங்களைச் சேகரிக்கும் பொறிமுறையை வலுப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கின்றது.
கடந்த வருடத் தீர்மானத்தின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் இந்தப் பொறிமுறையை உருவாக்கியுள்ளது.
இந்தப் பொறிமுறை இயங்குவதற்கு மேலும் வளங்களை வழங்குமாறு புதிய பிரேரணை வேண்டுகோள் விடுக்கின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலில் தனக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படுவதைத் தடுப்பதற்கான ஆதரவை 47 நாடுகளிடமிருந்து பெற முடியாது என இலங்கை கருதுவதாக வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கைக்கு ஆதரவாக கடந்த காலங்களில் வாக்களித்துவந்துள்ள பங்களாதேஷ், ரஷ்யா போன்ற நாடுகள் இம்முறை மனித உரிமை கவுன்ஸிலில் வாக்களிக்கும் உறுப்புரிமை பெறவில்லை.
இந்தியா இம்முறையும் வாக்கெடுப்பை தவிர்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. பிராந்திய வல்லரசின் அழுத்தங்கள் காரணமாக நேபாளமும் வாக்கெடுப்பைத் தவிர்க்கக் கூடும்.
வழமையாக இலங்கைக்கு ஆதரவளிக்கும் மத்திய கிழக்கு நாடுகளும் இம்முறை வாக்களிப்பை தவிர்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.
பிரேரணையைக் கொண்டுவருபவர்களிற்கு போதிய ஆதரவு கிடைக்கும். இந்த யதார்தத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம் என்று வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணைக்கு இணை அனுசரணையாளர்களாக மேலும் பல நாடுகள் கைச்சாத்திட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பிலான வரைவுப் பிரேரணைக்கு ஆரம்பத்தில் பிரித்தானியா, அமெரிக்கா, ஜேர்மனி, கனடா, மலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகளே அனுசரணை வழங்கியிருந்தன.
இந்தநிலையில் அல்பேனியா, ஆஸ்திரேலியா, ஒஸ்ரியா, பெல்ஜியம், கனடா, செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, லத்வியா, லிச்சென்ஸ்டீன், லித்துவேனியா, லக்சம்பர்க், மார்ஷல் தீவுகள், நெதர்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகள் பிரேரணைக்கு அனுசரணை வழங்கிக் கையெழுத்திட்டுள்ளன.
நோர்வே, ஸ்லோவாக்கியா, சுவீடன், துருக்கி, பிரித்தானியா, வடக்கு அயர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் இந்தப் பிரேரணைக்கு அனுசரணை வழங்கியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸிலின் அமர்வு எதிர்வரும் 7ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில், இலங்கை தொடர்பான பிரேரணை மீது நாளைமறுதினம் வியாழக்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
ஜெனிவா கூட்டத் தொடரின் இறுதி அமர்வில் பங்கேற்பதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஜெனிவா பயணமாகியுள்ளார்.
வாக்களிக்கத் தகுதியுள்ளா 47 நாடுகளில் ஆக ஆறு நாடுகள் மாத்திரமே தனக்கு ஆதரவாக – பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் என கொழும்பு அச்சம் கொண்டுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய பிரேரணை நிறைவேற்றப்படுவதைத் தடுக்க முடியும் என தேவையற்ற நம்பிக்கையைத் தாம் கொண்டிருக்கவில்லை என வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை குறித்த இந்தப் பிரேரணை இலங்கையின் பொறுப்புக்கூறல், மனித உரிமை மீறல் தொடர்பில் ஆதாரங்களைச் சேகரிக்கும் பொறிமுறையை வலுப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கின்றது.
கடந்த வருடத் தீர்மானத்தின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் இந்தப் பொறிமுறையை உருவாக்கியுள்ளது.
இந்தப் பொறிமுறை இயங்குவதற்கு மேலும் வளங்களை வழங்குமாறு புதிய பிரேரணை வேண்டுகோள் விடுக்கின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலில் தனக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படுவதைத் தடுப்பதற்கான ஆதரவை 47 நாடுகளிடமிருந்து பெற முடியாது என இலங்கை கருதுவதாக வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கைக்கு ஆதரவாக கடந்த காலங்களில் வாக்களித்துவந்துள்ள பங்களாதேஷ், ரஷ்யா போன்ற நாடுகள் இம்முறை மனித உரிமை கவுன்ஸிலில் வாக்களிக்கும் உறுப்புரிமை பெறவில்லை.
இந்தியா இம்முறையும் வாக்கெடுப்பை தவிர்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. பிராந்திய வல்லரசின் அழுத்தங்கள் காரணமாக நேபாளமும் வாக்கெடுப்பைத் தவிர்க்கக் கூடும்.
வழமையாக இலங்கைக்கு ஆதரவளிக்கும் மத்திய கிழக்கு நாடுகளும் இம்முறை வாக்களிப்பை தவிர்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.
பிரேரணையைக் கொண்டுவருபவர்களிற்கு போதிய ஆதரவு கிடைக்கும். இந்த யதார்தத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம் என்று வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணைக்கு இணை அனுசரணையாளர்களாக மேலும் பல நாடுகள் கைச்சாத்திட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பிலான வரைவுப் பிரேரணைக்கு ஆரம்பத்தில் பிரித்தானியா, அமெரிக்கா, ஜேர்மனி, கனடா, மலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகளே அனுசரணை வழங்கியிருந்தன.
இந்தநிலையில் அல்பேனியா, ஆஸ்திரேலியா, ஒஸ்ரியா, பெல்ஜியம், கனடா, செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, லத்வியா, லிச்சென்ஸ்டீன், லித்துவேனியா, லக்சம்பர்க், மார்ஷல் தீவுகள், நெதர்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகள் பிரேரணைக்கு அனுசரணை வழங்கிக் கையெழுத்திட்டுள்ளன.
நோர்வே, ஸ்லோவாக்கியா, சுவீடன், துருக்கி, பிரித்தானியா, வடக்கு அயர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் இந்தப் பிரேரணைக்கு அனுசரணை வழங்கியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸிலின் அமர்வு எதிர்வரும் 7ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில், இலங்கை தொடர்பான பிரேரணை மீது நாளைமறுதினம் வியாழக்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
ஜெனிவா கூட்டத் தொடரின் இறுதி அமர்வில் பங்கேற்பதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஜெனிவா பயணமாகியுள்ளார்.
Related Posts