22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!
Politics 1 வருடம் முன்
அரசமைப்பிற்கான 22 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் இறுதி நிலைப்பாடு குறித்து ஆராய்ந்து விரைவில் தமக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு இன்று ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேற்படி திருத்தச்சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் பல சந்தர்ப்பங்களில் முரண்பாடான நிலைப்பாட்டை எடுத்து வரும் நிலையிலேயே ஜனாதிபதி இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளது.
22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஆளும் தரப்பில் இருந்து எதிர்க்கட்சிக்கு சென்ற குழுவினர் ஒரு கருத்தையும், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றொரு கருத்தையும் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதனால் 22 குறித்து இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 22 ஐ இறுதிப்படுத்தும் நோக்கிலேயே ஜனாதிபதியால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி திருத்தச்சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் பல சந்தர்ப்பங்களில் முரண்பாடான நிலைப்பாட்டை எடுத்து வரும் நிலையிலேயே ஜனாதிபதி இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளது.
22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஆளும் தரப்பில் இருந்து எதிர்க்கட்சிக்கு சென்ற குழுவினர் ஒரு கருத்தையும், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றொரு கருத்தையும் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதனால் 22 குறித்து இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 22 ஐ இறுதிப்படுத்தும் நோக்கிலேயே ஜனாதிபதியால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related Posts