22 ஆவது திருத்தச்சட்டமூலம்மீதான விவாதம் ஒத்திவைப்பு!

Politics 1 வருடம் முன்

banner
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதம் அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது நடைபெறும் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அறிவித்தார்.

22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் ஆரம்பமாக இருந்தது.

இந்நிலையில் சபாநாயகர் தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இம்முடிவு மாற்றப்பட்டது. அடுத்த நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.