“பணயக் கைதிகள் மீட்பு” – யூத ஆஸ்திரேலியர்கள் கொண்டாட்டம்!
காசாவில் ஹமாஸ் அமைப்பால் பணயக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டிருந்த நால்வர் இஸ்ரேல் இராணுவத்தால் மீட்கப்பட்டமை தொடர்பில் யூத ஆஸ்திரேலியர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறித்த பணயக் கைதிகளை மீட்பதற்காக இஸ்ரேல் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கையில் 200 இற்கு மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
“ பணயக் கைதிகள் மீட்கப்பட்டுள்ளதால் யூத குடும்பங்கள் மகிழ்ச்சியில் உள்ளன.” – என்று யூத ஆஸ்திரேலியர்களின் நிர்வாகக் குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
“ பணயக் கைதிகளுக்காக நாம் பிராந்த்தனை செய்தோம், இன்று அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஏனையோரும் இவ்வாறு மீட்கப்பட வேண்டும்.” – எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இஸ்ரேலியர்களுக்கான தமது ஆதரவு குரல் தொடர்ந்து ஓங்கி ஒலிக்கும் எனவும் யூத ஆஸ்திரேலியர்கள் சூளுரைத்துள்ளனர்.