இஸ்ரேல் தாக்குதல்களில்ஈரான் உயர்மட்ட அதிகாரிகள் பலி.
ஞாயிற்றுக் கிழமை நடந்த இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) உளவுத்துறைத் தலைவர் மற்றும் இரண்டு ஜெனரல்கள் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதிலிருந்து குறைந்தது 224 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் கூறுகிறது. இஸ்ரேலில், குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈரான் இஸ்ரேல் மீது பழிவாங்கும் தாக்குதல்களைத் தொடங்கியதால், தெஹ்ரான் மற்றும் பிற ஈரானிய நகரங்களில் இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
இதனிடையே இஸ்ரேலிய தாக்குதலின் போது ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் வெளியுறவு அமைச்சக கட்டிடம் தாக்கப்பட்டது. இதில் அமைச்சக ஊழியர்கள் உட்பட பலர் காயமடைந்தனர்.
தலைநகரான தெஹ்ரானில் உள்ள அதன் கட்டிடங்களில் ஒன்றின் மீது இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதலை ஈரான் வெளியுறவு அமைச்சகம் கடுமையாக கண்டித்துள்ளது,
இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் தலைநகரான தெஹ்ரான் மீது இஸ்ரேலிய தாக்குதல்களினால் பல நாட்களாக தெஹ்ரான் எரிந்து கொண்டிருக்கிறது" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
சபா.தயாபரன்