ஈரானில் செயற்கை மழையை பெய்ய வைப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஈரானில் தற்போது வரலாறு காணாத வறட்சி நிலவுகின்றது. இதனால் ஈரானின் ஆகப் பெரிய ஏரியான உர்மியா வறண்டுவிட்டது.
அந்த ஏரி உள்ள பகுதியில் செயற்கை மழை பெய்ய வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு, மேற்கு அஸர்பைஜான் வட்டாரங்களில் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டது.
தலைநகர் தெஹ்ரானில் நூறு ஆண்டு காலத்தில் ஆகக் குறைவான மழைப்பொழிவு இம்முறை பதிவாகியுள்ளது.
நாட்டின் பாதிப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழையே பெய்யவில்லi என தெரியவருகின்றது.