ஈராக் தலைநகரான பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
தூதரக வளாகத்தில் உள்ள ஹெலிபேட் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
தாக்குதலைத் தொடர்ந்து தீவிபத்து ஏற்பட்டு கட்டிடத்தின் இருந்து கரும்புகை வெளியேறும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இது ஒரு ட்ரோன் தாக்குதல் என்று சில பாதுகாப்பு அதிகாரிகள் கூறினாலும், ஏவுகணை மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்கத் தூதரகம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.பலமான பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் பாக்தாத் அமெரிக்கத் தூதரக வளாகத்தை ஈரானின் தாக்கியுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.⚡️