இலங்கையில் 2 மில்லியன் பேருக்கு தடுப்பூசி

banner

இலங்கையில் 2021 ஜனவரி 29 ஆம் திகதி முதல் ஜுன் 08 ஆம் திகதிவரை 20 லட்சத்து 23 ஆயிரத்து 256 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இன்றைய தினமும் தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்படுகின்றது.





இலங்கையில் தற்போது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ரா செனகா நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொவிஷீல்ட் (Covishield) , சீனாவின் தயாரிப்பான சினோ பாம் (Sinopharm), ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் – பை (Sputnik – V) ஆகிய தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுவருகின்றன.





இதன்படி கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 9 லட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது. இவ்வாறு முதலாவது டோஸை பெற்றுக்கொண்டவர்களில் 3 லட்சத்து 53 ஆயிரத்து 789 பேருக்கு இரண்டாம் டோஸ் ஏற்றப்பட்டுள்ளது.





2021 மார்ச் 26 ஆம் திகதி முதல் ஜுன் 08 ஆம் திகதிவரை 10 லட்சத்து 33 ஆயிரத்து 28 பேருக்கு சினோ பாம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. 166 பேருக்கு நேற்று இரண்டாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளது.





ஸ்புட்னிக் – பை தடுப்பூசி ஏற்றும் பணி ஏப்ரல் 30 ஆம் திகதி ஆரம்பமானது. ஜுன் 08 ஆம் திகதிவரை 64 ஆயிரத்து 986 பேருக்கு அந்த தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளது.