சிறுமிமீது பாலியல் வன்புணர்வு - வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்
Sri Lanka 2 ஆண்டுகள் முன்
13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சிறுமியின் தந்தையும், காதலனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணொருவர் உட்பட மேலும் மூவரும் கைதாகியுள்ளார். மேலும் ஆறு பேரை கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
கண்டி மாவட்டத்துக்குட்பட்ட நாவலப்பிட்டிய, ஹரங்கல பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுமி கடந்த முதலாம் திகதி முதல் காணாமல்போயுள்ளார் என சிறுமியின் தாயால் நாவலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சிறுமியை அவரின் உறவினர்கள் சிலர் கடந்த 7 ஆம் திகதி பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து சிறுமி நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது தன்னை தந்தை 10 வயதில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் எனவும், காதலன் கற்குகையொன்றுக்கு கொண்டுசென்று பல தடவைகள் துஷ்பிரயோகம் செய்தார் எனவும் சிறுமி வாக்குமூலமளித்துள்ளார்.
இதன்பிரகாரம் பிரதான சந்தேக நபர்களாக சிறுமியின் தந்தையும், காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் சிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்த அனுமதித்த குற்றச்சாட்டின்கீழ் பெண்ணொருவர் உட்பட மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நாவலப்பிட்டிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஆறுபேரை கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
Related Posts