'டயமக சிறுமி மரணம்' - ரிஷாட்டின் வீட்டில் சோதனை

banner

டயகம சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூவரிடம் பொரளை பொலிஸார் தற்போது வாக்குமூலம் பெற்றுவருகின்றனர்.





அத்துடன், ரிஷாட் பதியுதீனின் வீடும் இன்று பொலிஸாரால் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.





சிறுமி தங்கியிருந்த பகுதி, சம்பவம் இடம்பெற்ற இடம் உட்பட சில இடங்கள் கண்காணிக்கப்பட்டுள்ளன.





ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் சந்தேகத்துக்கிடமான முறையில் டயகம சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸாரும், மேலும் இரு பொலிஸ் குழுக்களும் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன.





அத்துடன், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சும் விசேட விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளது.