முல்லைதீவிலும் தலைதூக்கும் டெல்டா
Sri Lanka 2 ஆண்டுகள் முன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் 5 பேர் இனம் காணப்பட்டுள்ளார்கள். டெல்டா வைரஸ் வீரியம் கொண்ட வைரஸ் ஆகும். பரவும் வேகம் மிக அதிகமாக காணப்படுகின்றது. அண்மையில் பலரின் மாதிரிகள் ஸ்ரீஜெயவர்தன பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் 113 பேருக்கு டெல்டா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் 5 பேரின் மாதிரிகளில் டெல்டா வைரஸ் தொற்று இனம் காணப்பட்டுள்ளது. இரண்டு பொலிஸார் மற்றும் 3 பிரதேசவாசிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
டெல்டா வைரஸ் பரவும் வீரியம் கொண்டது. எனவே மக்கள் சுய சுகாதார பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றாத மக்களாகவே புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் காணப்படுகின்றமை அண்மைய நாட்களில் அவதானிக்கமுடிந்துள்ளது. எனவே மக்கள் அறிவுரைகளை கேட்டு நடந்துகொள்ளுமாறு சுகாதார தரப்பினர் அறிவித்துள்ளர்கள்.
Related Posts