பாட்டியை கொலைசெய்த பேரன் கைது!
Sri Lanka 2 ஆண்டுகள் முன்
வெலிவேரிய - நெதுன்கமுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி தனது பாட்டியை கொலை செய்த பேரன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று(17) இடம்பெற்ற இச்சம்பவத்தில் 74 வயதான வயோதிபப் பெண் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி இருவருக்கும் இடையில் வீட்டில் இடம்பெற்ற வாக்குவாதத்தின்போது, சந்தேகநபர் தனது பாட்டியை கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன் உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Related Posts