'நீண்ட நாட்களுக்கு பிறகு 100 இற்கும் குறைவான கொவிட் மரணங்கள்'

banner

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 84 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 51 ஆண்களும், 33 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.





புத்தாண்டு கொத்தணியின் பின்னர் இலங்கையில் மரண எண்ணிக்கை அதிகரித்திருந்தது. ஒரு கட்டத்தில் நாளாந்தம் 200 இற்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஊரடங்கின் பின்னர் அந்த எண்ணிக்கை சிறிதுகாலம் 150 ஆக குறைந்திருந்தது.





இந்நிலையிலேயே நீண்ட நாட்களுக்கு பின்னர் 100 இற்கும் குறைவான மரணங்கள் பதிவாகியுள்ளன.