யாழில் 19,987 பேர் பாதிப்பு - 65 வீடுகள் சேதம்

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெய்த கடும் மழையால் 65 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்று யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.





இன்று மதியம் 3 மணி வரையிலான பாதிப்பு தொடர்பாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.





அதில், நேற்று இரவு முதல் பெய்த மழை காரணமாக யாழ் மாவட்டத்தில் இதுவரை 5,908 குடும்பங்களைச் சேர்ந்த 19,987 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.





குறிப்பாக யாழ்ப்பாணம்,நல்லூர், சண்டிலிப்பாய், சங்கானை,உடுவில், தெல்லிப்பளை, கோப்பாய், சாவகச்சேரி,கரவெட்டி, பருத்தித்துறை, மருதங்கேணி, வேலணை, ஊர்காவற்றுறை, காரைநகர் பிரதேச செயலர் பிரிவுகளிலேயே இந்த அறிக்கை எமக்கு கிடைக்கப்பெற்றது.





131 குடும்பங்களைச் சேர்ந்த 438 நபர்கள் மாத்திரமே இடம்பெயர்ந்தவர்கள் என்றவகையிலே தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.