யாழ். மாவட்டத்தில் நாளையும் பாடசாலைகளுக்கு விடுமுறை
Sri Lanka 2 ஆண்டுகள் முன்
அடை மழையால் நாளையும் (10) யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என யாழ்ப்பான மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
வடமாகாண ஆளுநர் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோரின் அனுமதியுடன் சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலையை தொடர்ந்து மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
பாடசாலைகளை திறப்பதற்கான மாற்று தினங்கள் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது. இன்றைய தினமும் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
Related Posts