இயற்கை சீற்றத்தால் 18 பேர் பலி!

banner

நாட்டில் 23 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற கால நிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.





வெள்ள நீரில் மூழ்கி 9 பேரும், மண்சரிவில் சிக்குண்டு எழுவரும், மின்னல் தாக்கி இருவருமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.





அத்துடன், சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் பகுதியளவு சேமடைந்துள்ளன. மேலும் சில வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.





சீரற்ற காலநிலையால் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்றிரவு தகவல் வெளியிட்டுள்ளது.





நாட்டில் தற்போது நிலவும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை இன்றும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.