இலங்கையை மிரட்டும் 'சிலிண்டர் வெடிப்பு' - இளம் பெண் பலி

banner

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.





வெலிகந்த பிரதேசத்தில் வசித்து வந்த 19 வயதுடைய திருமணமான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.





கடந்த 13ஆம் திகதி தமது வீட்டில் உள்ள எரிவாயு அடுப்பை பற்றவைக்க முற்பட்ட வேளையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் பலத்த காயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.





எனினும், அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தள்ளார்.





இதேவேளை, இன்றைய தினம் நிக்கவெரட்டிய, கந்தேகெதர பிரதேசத்தில் எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





இந்த வெடிப்புச் சம்பவத்தில் குறித்த வீட்டில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதோடு, தெய்வாதீனமாக எந்தவொரு உயிர் சேதங்களும் ஏற்படவில்லை என நிக்கவெரட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.





இலங்கையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக சமையல் எரிவாயு சிலிணடர்கள் வெடித்துவருவதால் பாவனையாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.