'வங்கிக் கணக்குகள் முடக்கம்' - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

banner

சட்டவிரோதமான முறைமைகள் ஊடாக நாட்டுக்கு பணத்தை அனுப்பும் மற்றும் விநியோகிப்போரின் வங்கிக் கணக்குகளை உடனடியாக இடைநிறுத்துவதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.





இதன் காரணமாக வௌிநாடுகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் தமது வருமானத்தை அனுப்பிவைப்பதற்கு சட்டபூர்வமான நடைமுறைகளை மாத்திரம் பயன்படுத்துமாறு மத்திய வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.





இதேவேளை, இம் மாதத்திற்குள் வௌிநாட்டிலிருந்து அனுப்பப்படுகின்ற ஒவ்வொரு டொலருக்கும் மேலதிகமாக 10 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்க இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.