இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு - ஒருவர் பலி - 41 பேர் காயம்

World 2 ஆண்டுகள் முன்

banner

ந. பரமேஸ்வரன்





இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள எரிமலை வெடிப்பு காரணமாக ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 41 பேர் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.





ஜகார்தாவிலுள்ள லூம்ஜாங் மாவட்டத்தின் இரு பிரிவுகளில் சனிக்கிழமைஉள்ளூர் நேரப்படி மாலை மூன்று மணிக்கு இந்த எரிமலை வெடிப்பு இடம்பெற்றுள்ளது.





புகை மண்டலத்தின் நடுவே அரச பணியாளர்கள் மக்களை வெளியேற்றும் காணொளிகள் வெளிவந்துள்ளன.





புகை சூழ்ந்த உள்ளூர் பள்ளிவாசலில் மக்கள் தஞ்சம் புகுந்துள்ள காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கு முகக்கவசம் கம்பளிப்போர்வை, உணவு போன்றவற்றை ஏற்பாடு செய்யும் நடவடிக்கையில் அரச பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.