கிண்ணியா படகு விபத்து - பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

banner

திருகோணமலை, கிண்ணியா - குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.





கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பெண் ஒருவரே நேற்று உயிரிழந்துள்ளார்.





கடந்த மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டிருந்த குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.