அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் நான்கு நாட்களுக்கு முன்னர் கைகுழந்தையொன்று கடதாசிப்பெட்டிக்குள் உறைபனிக்குள்ளிருந்து ஆரோக்கியமான நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இராணுவ துருப்புகள் அந்தப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது குழந்தையை கண்டெடுத்துள்ளனர். குழந்தை மீட்கப்பட்ட போது அப்பகுதியின் வெப்பநிலை -12 பாகைக்கும் குறைவகவே இருந்துள்ளது.
குழந்தையின் அருகில் எனது பெற்றோரிடமோ தாத்தா பாட்டியிடமோ பணம் இல்லை என்னை எடுத்துச்சென்று அன்பாக என்னை கவனிக்கக்கூடியவர்களிடம் ஒப்படையுங்கள் என்ற வாசகம் காணப்பட்டுள்ளது என ஒரு பெண் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு பின்னர் அகற்றப்பட்டு விட்டது. ஆனால் குழந்தையை கண்டெடுத்த துருப்புகள் குழந்தையை கவனிப்பதற்கு ஒருவருமில்லை என்ற வாசகமே காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள Health Partners என்ற அறக்கட்டளை குழந்தை பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளது. குழந்தையைப்பற்றிய தகவல் தெரிந்தோர் தொடர்பு கொள்ளுமாறு ஊடகங்கள் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.