புத்தளத்தில் அடிதடி - ஒருவர் படுகொலை

banner

புத்தளம் – சேகுவன் தீவு பகுதியில் ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றமையே கொலைக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





புத்தளம் – மூன்றாம் கட்டை பகுதியை சேர்ந்த 38 வயதான ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.





சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.