கஞ்சாவுடன் மலையேறவந்த பிக்கு கைது!

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

பௌத்த, இந்து மக்கள் புனித பிரதேசமாக மதிக்கும் சிவனொளிபாத மலைக்கு வந்து, போதையில் முறையற்ற வகையில் நடந்து கொண்ட பௌத்த பிக்கு ஒருவரை நல்லதண்ணி பொலிஸார் கைது செய்துள்ளனர்.





கைது செய்யப்பட்ட இந்த பௌத்த பிக்கு மேலும் மூன்று பேருடன் குருணாகல பிரதேசத்திலிருந்து வாகனமொன்றில் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வந்துள்ளார். இந்தக் குழுவினர் நல்ல தண்ணியிலிருந்து சிவனொளிபாத மலைக்கு செல்லும் வழியில் போதையில் முறையற்ற வகையில் நடந்து கொள்வதாக நல்லதண்ணி பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.





உடனடியாக செயற்பட்ட பொலிஸார் விரைந்து சென்று இந்த பௌத்த பிக்குவை கைது செய்துள்ளனர். இந்த பௌத்த பிக்குவை சோதனையிட்டபோது கஞ்சா பக்கெட்டொன்றும் கைப்பற்றப்பட்டது.





சந்தேகநபரான பௌத்த பிக்கு வந்த வாகனத்தை சோதனையிட்ட பொலிசார் வானத்திலிருந்து மேலும் ஒரு கஞ்சா பக்கெட்டொன்றொன்றையும் கைப்பற்றினர். இதையடுத்து வாகன சாரதியும் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.





சந்தேகநபர்களை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நல்லதண்ணி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.